Saturday 8 May 2010

பாலங்கள் இரண்டு


இந்த படத்திற்கு விளக்கம் தேவை இல்லை என்று முன்பு ஒரு பத்தரிகையில் தொடர் கார்டூன் வரும். நாம் ரசிப்போம். அப்படி ஒரு தலைப்பு சூட்ட பொருத்தமான இந்த படங்கள் நமது ரசிப்பிற்கு அல்ல.
சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
இன்றும் வழக்கம் போல அத்தனை வாகனங்களும் அதே வேகம் குறையாமல் இந்த நொண்டி பாலத்தை கடந்து சென்று கொண்டு தான் உள்ளன. இதற்க்கு முன் இரண்டு தடவைகள் இந்த பாலம் குறித்து mypno வலைப்பூவில் பதிவிட்டும் எந்த பாயிதாவும் இல்லை. ( http://mypno.blogspot.com/2008/03/blog-post_27.html &http://mypno.blogspot.com/2008/11/blog-post_8168.html )
கும்பகோணம் பள்ளி தீவிபத்து, சரிகாஷா ஈவ்டீசிங் மரணம் போல இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல.

பாலம் இரண்டு

" வர்ர்ர்ர் ரூரூம்ம்ம்ம் ஆனா வராஆஅஆஆ...து" என்று ஏதோ வடிவேலு காமடி ரேஞ்சில் போய்கொண்டு இருக்கும் இந்த பாலம் தான் பரங்கிபேட்டை மற்றும் அதன் சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் கனவுப்பாலம்.

முஹம்மது யூனுஸ், பஜுலுர்ரஹ்மான் போன்றவர்கள், கொடி பிடிக்கும் கட்சிகள் முதல் தெருமுக்கு ஷாஜகான் வரை அத்தனை பெரும் கனவு கண்டு முட்டி மோதி முயற்சி செய்து ஒரு வழியாக ஒன்பது கோடி செலவில் பல வருடங்களுக்கு முன்பு sanction ஆகிய பாலம், இன்று கிட்டத்தட்ட பதினாலு கோடி ப்ராஜக்டாக வளர்ந்து நிற்கிறது.
நாம் சென்று பார்த்த போது ஆற்றின் கால்வாசி தூரம் மணல் அடித்து வேலை மிக ஜரூராக நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவான இடத்தில் நின்று அக்கரையை ஏக்கத்துடன் பார்த்தபோது தொட்டு விடும் தூரம் தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது
இந்த பாலம் வந்து விட்டால் "கொல்லைக்கி போய் ரெண்டு கொத்து கருவாப்பெளை பறிச்சிட்டு வா என்பது போல் கிள்ளைக்கு போய் ரெண்டு மூட்ட அரிசிய வண்டியில போட்டுட்டு பத்து நிமிஷத்துல வா ராசா" என்று நம் வீட்டு பெண்கள் நம் சிறார்களை இயல்பாய் ஏவக்கூடிய வசதியான நிலை வரலாம்.
சில பல வருடங்களுக்கு முன்பு சமாளிக்க முடியாது என்று அடாசு ரேட்டுக்கு முன்னோர்களின் அக்கறையான அக்கறை நிலங்களை விற்றவர்கள், இப்போது யோசிக்க கூடும். இப்போது நிலம் இருந்தால் மட்டும் என்ன அவையும் மனைபிரிவுகளாக மாறி விடும்.
சிதம்பர பயணத்திற்கு கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோ மீட்டர், பெட்ரோல் மற்றும் நேர மிச்சம் தரும் இந்த பாலம் இத்தனை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

No comments: