Saturday 8 May 2010

மரண சிந்தனை

"டீ போட்டு வை. இதோ வந்துடறேன்" என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்றவர், இப்போது நம்மிடையே இல்லை. (அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக). நாம் அனைவரும் மிக அடிக்கடி உபயோகப்படுத்தும் இந்த வார்த்தை ( இதோ வந்துடறேன் ) எத்தனை நிச்சயமற்ற வார்த்தை...!

நிச்சயமின்மை எனும் போர்வை நம் மீதும், நாம் டீல் பண்ணும் அனைத்து விஷயங்கள் மீதும் எப்போதும் படிந்துள்ளதை ஜனாசா தொழுகைக்கு வருகையில் (லாவது) கவனிக்க முடிந்தது.

மரணம் எனும் மாபெரும் நிதர்சனம் முகத்தில் அறையும் போது, சகலமும் அர்த்தமற்று போய்விடுகின்றன. நமது ஈகோக்கள், அபிலாஷைகள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், உறவுகள், நல்லவை, கெட்டவை அனைத்தும் நம்மை பார்த்து கேலியாக சிரிக்கின்றன.

ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தில் நாமே இல்லாமல் போய் விட்ட பிறகு நமக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வியின் கணம் எப்போதும் தாங்க முடியாததாக இருக்கிறது.

சில பத்து வருடங்களின் வினைகளை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வெம்மையில் காத்திருக்கிறது படைப்பாளனிடம் பதிலாக சொல்லி ஆகவேண்டும் என்ற உண்மை உரைப்பதற்க்காவது இந்த ஜனாசா தொழுகை எனக்கு பயன்படட்டும்.

அனைவரும் சுவைத்தே ஆக வேண்டும் என்று இறைவன் குறிப்பிடும் அந்த மெகா உண்மையின் வீரியம் (புரிந்தும்) புரியாமல் நமது கனவுகளில் புதைந்துக்கொண்டு நாம்....

(வாழும்போது நல்லவிதமாகவே வாழ்ந்து இன்று இல்லாமல் போய் விட்ட அனைவருக்காகவும், நமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.)

No comments: