Saturday 8 May 2010

பேட்டையில் பெய்தது மாமழை



மரித்துப்போன மனங்களை தனது அருளால் உயிர்ப்பிக்கும் மகத்தான கொடையாளனாகிய அல்லாஹ், வறண்டு போய் இறந்து விட்ட பூமியை செழிப்படைய செய்ய தனது கருணை மழையை இறக்குகிறான். வெக்கையான இரவுகளையும், வெளியே தலை காட்ட முடியாத வெயில் பகல்களையும் அனுபவித்து கொண்டிருந்த பரங்கிபேட்டை மாமக்களுக்கு ஒரு இனிய நற்செய்தியாக இன்று காலை சுமார் அரை மணி நேரம் பொழிந்து தள்ளிய மாமழை மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது.

நேற்று கூட லேசாக இங்கும் அங்குமாக தூறல்கள் விழுந்தது. ஆனால், இரவில் அது புழுக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பெய்த மழையினால் பொங்கிய நீர் பெய்து முடித்த சில மணித்துளிகளிலேயே காய்ந்து போய் தெருக்கள் மீண்டும் வறட்சியாக காணப்பட்டது இந்த கோடையின் கொடுமையை உணர வைத்தது.

மழை காமெடி

அழகிய மழைக்கால கச்சேரி தெரு
மீண்டும் புயல், மழை, வேக காற்று வீசும் என்று பத்திரிகைகளும் டிவீ யும் கடந்த நான்கு நாட்க்களாக ஸ்பிக்கர் கிழிய கத்தியது தான் மிச்சம். ஒரு துளி மழையும் இல்லை, சற்று வேகமான காற்று கூட இல்லை.


ஆனால் இன்று பத்திரிக்கைகளில் செய்தி புயல் அபாயம் நீங்கியது அடை மழை பயம் இலலை. இந்த செய்திக்காகவே காத்திருந்ததுபோல் இன்று காலை பிடித்த மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து வருகிறது.


இதில் நாம் கற்றுக்கொள்ள பாடம் ஒன்று இருக்கிறது - என்னதான் விளக்கமாக ரமணன் சார் சொன்னாலும் ஆண்டவன் நெனச்சாதான் மழை பெய்யும். (இதை அவரும் மறுக்க மாட்டார்)

No comments: