Saturday 8 May 2010

மீராப்பள்ளி.

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம்,மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

மெருகேறும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி



காலசூழல்களுக்கேற்பவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் சுற்று முழுவதும் தரமான இரும்பு கிரில் கேட்கள் அமைக்க ஜும்ஆவில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் அழகிய முறையில் அமைக்கவும் பட்டது. தற்போது மஸ்ஜிதின் முன்புறம் மழை / வெயில் கருதி சிமெண்ட் ஷீட் கொண்டு சிறிது தூரம் கூரை அமைக்கப்பட்டுள்ளது. பெருநாள் போன்ற மக்கள் அதிகம் கூடும் தினங்களில் இது மிகவும் வசதியாக அமையும். மீராப்பள்ளி சம்பந்தப்பட்ட வளர்ச்சி பணிகள குறை கூறும் அபத்த போக்கு முன்பு சிலரிடம் காணப்பட்டது.இறையில்லத்தை பரிபாலனம் செய்வது, எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவற்றை விஸ்தீரணம் செய்வது போன்றவை இயல்பாகவே மஸ்ஜித் நிர்வாகத்தின் பணிகளாகும். பேரூராட்சியின் மயான மேம்பாடு திட்டத்தினை பயன்படுத்தி கபுருஸ்தானை ஒழுங்கமைத்தது, பெரும்பாலும் எங்குமே இந்தளவு உருப்படியாக காணக்கிடைக்காத குளத்தினை பராமரித்து வருவது போன்ற பாராட்டத்தக்க விஷயங்கள நிர்வாகம் தொடர்ந்து செய்துதான் வருகிறது. அதனை பாராட்டாமல் இருந்தாலும் சரி, குறை சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், இப்படி வளர்ச்சி பணிகள முன்னெடுத்து செல்லும் மீராப்பள்ளியை குறை சொல்பவர்கள், பல பத்து வருடங்களாக இருந்தது போலவே இருந்து வரும் சில பள்ளிகள் குறித்து ஏன் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லை பேசுவதில்லை என்பது புரியாத புதிர்தான்.

No comments: