Wednesday 3 April 2024

தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு ஒரு விஸிட்

 ஸ்கேல் வைத்து கோடு கிழித்தார் போல் நீநீ...ள ரோடு...சுமார் 24 கி.மீட்டர் தூரத்துக்கு!!


ரோட்டின் இரண்டு பக்கமும் வெள்ளை வெளேர் மண்ல் மேடுகளும் அதைதாண்டி சற்று தூரத்தில் மயில்கழுத்து கலரில் தாலாட்டும் கடல்.

இரண்டு பக்கமும் கடல்.


இதமான பிப்ரவரி மாத இளம்வெயில்.


வசதியான ஒரு யமஹா பைக் கையில்.


எப்போதும் எனை ஈர்க்கும் மரவட்டை ரயிலில் பயணம்.


தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு ஒரு விஸிட் அனுபவம் இப்படிதான் இருந்தது.



இந்திய துணைக்கண்டத்தின் இலங்கையை நோக்கி நீளும் மணல் திட்டுக்கள்தான் அரிச்சல் முனை. அங்கிருந்து இலங்கை ஒரு சில மைல்கள் தான். ( போனாப்போவுது என்று போகாமல் திரும்பி வந்துவிட்டேன்)


மன்னார் வளைகுடா, ஆதம் பாலம், பாக் ஜலசந்தி முனைக்கு சென்று பார்த்துவிடும் ஆசை, அதானி சொத்துக்கள் போல எகிடுதகிடாக எனக்குள் வளர்ந்து, இதோ ஒருநாள் வந்தேவிட்டேன்.


அல்லாஹ்வின் பூமியும் கடலும் வானமும் எத்துனை பிரம்மாண்டமானது, அழகானது, மெஸ்மரிக்கும் அமைதி தரக்கூடியது என்று கொஞ்சமாவது புரிய,

 அல்லாஹ் சொல்வது போல் பூமியின் நீள அகலங்களை அவ்வப்போது சுற்றி பார்க்க வேண்டும்.


அனுபவங்களை விவரிக்க வார்த்தைகள் எனும் மீடியம் போதாது.


செல்ல விரும்புபவர்கள்...


ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரவு 11:30 சிதம்பரத்தில் காலை 7 மனிக்குள் மண்டபத்தில், ( பாம்பன் பால வேலை நடைபெறுவதால் மண்டபம். வரை மட்டுமே)..


அதே வண்டி மாலை 6 மணிக்கு கிளம்பி இரவு 1:30 க்கு சிதம்பரம் 


ராமேஸ்வரத்தில் நாள் வாடகைக்கு பைக் ( லோக்கல் ஆட்டோ காரர்களுக்கு பயந்து பயந்து கொடுக்கிறார்கள்) கிடைக்கும். 

ஐ.டி.கார்டு அட்வான்ஸ் போதும்.


எங்கே பார்த்தாலும் பீடாவா(ய)லாஸ். 

வடக்கே வந்துவிட்டேனோ என்று அவ்வப்போது சந்தேகம் வந்தது..


அழிந்துபோன தனுஷ்கோடி

ரயில் நிலையம், சர்ச் என்று அழிவின் மிச்சமீதி தடங்களை போகும்வழியில் பார்க்கலாம். 


வழியில், மீன்கறி சோறுக்கு கைபிடித்து இழுக்காத குறையாக அழைக்கிறார்கள்.


பாம்பன் பாலம்

 மனித எத்தனத்தின் பிரம்மாண்ட அடையாளம்.. 

அந்த உயரமும், அங்கிருந்து விரியும் கடல் மற்றும் ராமேஸ்வர மீன்பிடி துறைமுக படகுகள் காட்சியும் 

புது அனுபவம்.


உடன் செல்வதற்கு ஒத்த சிந்தனை அலைவரிசை கொண்ட நல்ல நண்பர்கள் வாய்ப்பது அதிபதியின் பெரும் கருணைகளில் ஒன்று.


எனக்கு கிடைத்தது.


அல்ஹம்துலில்லாஹ்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

No comments: