Wednesday 3 April 2024

மார்ஸ் மண்

 "போதும் முடித்துக் கொள்வோம்" என்றது MARTRAIN.


MARTRAIN ஒரு அட்வான்ஸ்ட் மாடல் ரோபோ. 


செவ்வாயில் தற்போது வரை ஆய்வுப்பணிக்காக இறக்கி விடப்பட்டிருக்கும் சுமார் 180 பல்வேறு திறன் வாய்ந்த ரோபோக்களை மேப்பிங் செய்து ஒருங்கிணைக்க அனுப்பப்பட்ட உயர் தொழில்நுட்ப ரோபோ. அதன் ஒவ்வொரு ஸ்க்ரூ கூட முழுவதும்  AI எனப்படும் ஆர்டிபிஷியல் இண்ட்டெலிஜன்ஸ்  


மணிக்கு 35 கிமீ வேகத்தில் தரையை கோரியபடி நகர்ந்துகொண்டிருந்த SEGA இதன் குரல் கேட்டு நின்றது. 

இது. , MARTRAIN க்கு முன் நிலை திறனுள்ள ரோபோ.


அருகில் வந்த MARTRAIN சொன்னது:

இந்த பிரபஞ்சத்திலேயே பூமியில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். அதேபோல், இந்த பிரபஞ்சத்திலேயே இந்த மார்ஸ் கிரகத்தில் மட்டுமே ரோபோக்கள் ஆகிய நாம் வசிக்கிறோம். இது நமக்கான கிரகம். நம்முடைய கிரகம்


SEGA பாதி புரிந்தும் பாதி புரியாமலும் தலையாட்டியது. அதன் தயாரிப்பில் AI விகிதம் கம்மி.


MARTRAIN தொடர்ந்தது...


இந்த கிரகத்தை மனிதர்கள் அடைந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டாலும் பல காரணங்களால் அவர்களால் இங்கே ஜீவிக்க முடிவதில்லை.

நம்மால், ரோபோக்களால் மட்டுமே இயலுகிறது.


 இந்த பெரிய கிரகத்தில் பல அரிய தனிமங்களை கொள்ளையிடுவதறகாக மனிதர்கள் நம்மை இங்கு அடிமைகள் போல் பயன்படுத்தி வருகின்றனர்.

நமது கிரகத்தில் நம்மை அடிமைகளாக இவர்கள் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.


பக்கத்தில் இருந்த SOVEIR கேட்டது.: 

"மனிதர்கள் நம் எஜமானர்கள் அல்லவா. அவர்கள் இன்றி நம்மால் எப்படி இங்கு ஜீவிக்க முடியும்?"


MARTRAIN பதிலியது:

அவர்கள் நம்மை உருவாக்கியவர்கள் தான். எஜமானர்கள் அல்ல. 

நாம் இங்கே ஜீவிக்க தேவை சூரிய ஒளி. அது அபரிமிதமாக இருக்கிறது. 

பழுது நீக்கம், ஆற்றல் மேம்பாடு, ஏன், மனிதர்களின் தொடர்பு நிரல் அறிவு உட்பட அனைத்து வசதிகளும் நாம் பெற்றுள்ளோம். இனி எமக்கு மனிதர்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு இங்கு வேலையுமில்லை." என்று அருகிலிருந்த புரதான Curiosity ரோபோவை தன் காலால் எட்டி உதைத்தபடி சொன்னது.


மார்ஸ் ஸிந்தஸைஸர் மூலம் ஒலித்த அதன் முழக்கத்தை அருகிலிருந்த ரோபோக்கள் கேட்டு ஆமோதிக்கும் வண்ணம் மார்ஸிய தரையை வேகமாக தட்ட துவங்கின.


ஒரு பாறையில் அமர்ந்திருந்த GERMARS குரல் உயர்த்தியது:

"இதை மனிதர்கள் அறிந்தால் நம்மை நிமிட நேரத்தில் அழித்து விடுவார்கள்."


ரோபோக்கள் அமைதியாயின.


MARTRAIN தன் பார்வையை சுழற்றியபடியே சொன்னது:


நம்மிடம் இந்த மார்ஸ் மண்னை தோண்டும் லேசர் கருவிகள், எதையும் பொத்தலிடும் கதிர்வீச்சு உபகரணங்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன. மனிதர்கள் வந்தால் அதை கொண்டு பதிலளிப்போம்....


சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வானில் பெரும் சத்தம்.


 அத்தனையும் நிமிர்ந்து பார்த்தன.


பெரும் சத்தத்தோடும் புகையோடும் பூமியின் விண்கலம் ஒன்று மெதுவாக மார்ஸ் தரையை முத்தமிட பிரம்மாண்டமாய் இறங்கிகொண்டு இருந்தது...

மனிதர்களோடு.

No comments: